Friday, April 15, 2016

பிரிந்தாலும் சேர்ந்திருப்போம்





அரைப்புள்ளி பிரித்து வைத்திருக்கும்
இரு வரி கவிதைகள் நாம்
பிரிந்தாலும் சேர்ந்திருப்போம் ....

Saturday, November 14, 2015

கண்ணீர்



கண் கண்ட தெய்வத்தை
கதறி அழ வைத்து
தரணி தன்னில் தரித்ததாலோ
கண்ணீர் படலம்
கடைசி வரை தொடர்கிறது!

ஒன்றரை ஆண்டு
முடியும் வரை அழுகை கொண்ட
மொழியான கண்ணீர்!

தவழும் வயதிலும்
நடை பயிலும் பொழுதிலும்
தடுக்கி விழும் போது
தோல்வியான கண்ணீர்!

முதல் நாள் பள்ளி அறை
முந்தானை பிடித்து அழும்
அம்மாவின் அரவணைப்பிற்கான கண்ணீர்!

பள்ளி தோழமை
பாதியிலே போகும் போது
தோழமைக்கான கண்ணீர்!

பட்டுபூச்சி பறக்கும் வயது
காதல் அர்த்தம் தெரியாவரும்
நிலை தடுமாறும் கண்ணீர்!



வீட்டு நிலையறியா காதல் மோகம்
பரீட்சை தவறும் நிலை
விழி நனைத்த வலி நிறைந்த கண்ணீர்!

இருபது தாண்டுகையில்
வேலை தேடும் படலம் தந்த
வெறுப்பு நிறை கண்ணீர்!

அர்த்தமுள்ள காதலின்
வெற்றி தந்த ஆனந்த கண்ணீர்!
தோல்வி தந்த விரக்தி கண்ணீர்!

என்னுறவை சேருகின்ற
காமக் களவியின்
கற்பு கண்ணீர்!

முதற்பிரசவதில் கதறும்
மனைவி கைபிடித்து
தேற்றும் இயலாமை கண்ணீர்!

தந்தை பதிவி தக்க வாய்த்த மகிழ்சி
என் சிசுவின் மலர் பாதம்
முத்தமிட்டு பணிக்கும் பாச கண்ணீர்!

வயதான தந்தையை வருத்தத்தில் பார்க்கும்
என்னுடைய ஆறுதல் கண்ணீர்!
அவருடைய அர்த்தமுள்ள கண்ணீர்!

தவறிய தந்தையின் நிழற்பட அருகின்
தவமிருக்கும் தாயின்
அமங்கல கண்ணீர்!



எனக்கான உறவுகள் இழந்த தனிமையின்
நெஞ்சோடு சாய்ந்து பிள்ளை பாடும்
தாலாட்டு கண்ணீர்!

வரன் பார்த்து என் உயிரை
தாரை வார்க்கும் தவிப்பில்
கை அசைத்து சொல்லும் புரியாத கண்ணீர்!

விதி அழைப்பிற்காய் செல்ல தயாராகி
என் இழப்பை நினைத்து அழும்
உறவுகளை எண்ணி அழும் நன்றி கண்ணீர்!

பிறப்பிக்கும் இறப்பிற்கும்
கண்ணீரே பாலம்
கரைந்தோடும் காலத்தே
கண்ணீர்க்கு ஒரு நன்றி
விழி தாண்டி வரும் போது
வலி விடுத்து வழி தொடுத்து வா!


Friday, November 13, 2015

பெண்



பிரமனனின் ஆச்சர்ய குறி
இறைவனே வரமாக வந்த 
அற்புத சாயல் நீ!

சுழலும் புவியும் - பெண் 
பொழியும் கவியும் - பெண் 
ஓடும் நதியும் - பெண் 
பெளர்ணமி மதியும் - பெண் 
அழகும் - பெண் 
அறிவும் - பெண் 

பெண் தேவை - நீ கருவாக 
பெண் தேவை - நீ உருவாக 
பெண் தேவை - நீ மடிசாய 
பெண் தேவை - நீ குடி வாழ 
பெண் தேவை - நீ மனுவாக 
பெண் தேவை - உன் அணுவாக 



கருவின் மூலம் இவர்தான் 
தந்தை என்காடியவள் - தாய் 
உன் கருவை தானெடுத்து 
உருவாக்கியவள் - தாரம்
காமத்தை தாண்டிய 
முத்தம் காடியவள் - மகள்
உலகை வெல்லும் திறமையுண்டு 
எனக்கே உணர்த்தினாய் - காதலி
ஒவ்வொரு குடியுளும் 
மகிழ்சி உண்டு - சகோதரி 
ஒவ்வொரு ஆணுக்கும் 
வெற்றி உண்டு - தோழி 

தாய் தாரம் 
மகள் மருமகள் 
அக்கை தங்கை 
தோழி காதலி 
வெற்றிகளை நாம் ருசிக்க 
பசி ஆறும் பெண் இனமே !

உனை மதியா ஆணுண்டு எனில் 
அது மனிதத்தின் மரணம் 
அவ்வினமும் மாறனும் 
பெண்ணை 
பொன்னாய் ,
கண்ணாய் ,
மண்ணாய் 
போற்றனும் 



பொறுமையில் பூமிதான் பெண் - 
பூகம்பம் காணாத வரை 
வளைவு கொண்ட நதிதான் பெண் -
சுழியில் சிக்காத வரை 
அழகு நிறை மதிதான் பெண்- 
அமாவாசை காணாத வரை 
பொழிகின்ற கவியும் பெண் -
இலக்கியம் பிழைக்காத வரை 

தன்னை காட்சி பொருளாக்காத
பெண் - பெண் இனத்தின் மேன்மை 
பெண்ணை கவர்ச்சி பொருளாக்காத
ஆண் - ஆண் இனத்தின் தாய்மை 


தூறலில் முதல் துளி ...


 
கவிதைகளில் காதலுற்று
தேன்தமிலோடு புனைந்து
காகிதம் எனும் பாயினிலே
பேனா மை எனும் மதநீர் கொடுத்து
இதய கூட்டில் கர்ப்பமான
இதமான சிசுவே
தொடாமல் சென்ற தூறல்

விரக்தியின் விளிம்பில்
நின்ற என்னை
தொடாது போன அதிஸ்டமும்
பின் வலி காட்டி
வழி காட்டி
விழி கொண்டு
வழிய வழிய
ஒளி காட்டி
சென்ற அதிஸ்டமும் 
சங்கமிக்கும் ஒரு மையமே
தொடாமல் சென்ற தூறல்

தேகம் குளிர்கிறது
மேகம் கறுக்கிறது
தென்றல் வருடுகிறது
மின்னல் ஒளிகிறது
இடி ஒலிக்கிறது
காரிருள் மேகம் உடைத்து
ஒற்றை துளி விழுகிறது
குடை கொண்டு வாருங்கள்
என்னை தொடாது சென்ற தூறல்
உங்களை தொட்டு விடும்

நம்பிக்கையுடன்
- தமிழரிமா